நடிகர் சீயான் விக்ரமின் மகன் தான் துருவ் விக்ரம் . கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் துருவ் விக்ரம் . ஆனால் இந்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து மகான் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் துருவ் விக்ரம் .
ஆனால் இந்த திரைப்படமும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பை பெற்றுத் தரவில்லை . இதனால் பட வாய்ப்பில்லாமல் பல வருடங்களாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் துருவ் விக்ரமுக்கு விடிவு காலம் வந்து விட்டது . அந்த வகையில் இயக்குனர் மாரி செல்வராஜ் கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை ,
படமாக எடுக்க உள்ளாராம் . இந்த படத்தில் துருவ் விக்ரம் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம் . அந்த படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப கண்டிப்பாக இந்த திரைப்படம் இதற்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று கூறி வருகின்றனர் …