April 22, 2024

என் படத்தில் நயன்தாரா நடிக்கவே கூடாது..!! 9 வருடம் ஆகியும் கூட கோபத்தில் இருக்கும் நடிகர் ..!! எந்த நடிகர் தெரியுமா ..??

தமிழ் சினிமாவை கலக்கி வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர்தான் நடிகை நயன்தாரா . தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா இதுவரை பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார் . ஆனால் ஒரு நடிகர் மட்டும் என் படத்தில் நயன்தாரா நடிக்கவே கூடாது என்று உறுதியாக கூறிவிட்டாராம் . அவர் வேறு யாருமில்லை நடிகர் அல்லு அர்ஜுன் தான் .

தெலுங்கு சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வரும் அல்லு அர்ஜுன் நயன்தாராவுடன் நடிக்காததற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதாம் . அது என்னவென்றால் நானும் ரௌடி  தான் என்ற படத்திற்காக நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான சைமா விருது கிடைத்திருக்கிறது.

அந்த விருதினை  கொடுப்பதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் மேடைக்கு வந்திருக்கிறார் . அப்படி அந்த விருதை வாங்குவதற்கு முன் விக்னேஷ் சிவன் கையில் இந்த விருதை வாங்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார் நடிகை நயன்தாரா  . அதன் பிறகு மேடைக்கு வந்த விக்னேஷ் சிவனிடம்,

அல்லு அர்ஜுன் அந்த விருதை கொடுத்திருக்கிறார் . இந்த சம்பவம் தான் அல்லு அர்ஜுன் மத்தியில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் மேடை நாகரிகம் தெரியாமல் நயன்தாரா இப்படி நடந்து கொண்டதால் அவர் என் படத்தில் நடிக்க கூடாது என்று 9 ஆண்டுகளாக,

ஒதுக்கி வைத்துள்ளாராம் நடிகர் அல்லு அர்ஜுன்.  குறிப்பாக சமீபத்தில் கூட அல்லு அர்ஜுன் படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  ஆனால் அவருடன் நான் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார் நடிகர் அல்லு அர்ஜுன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *