தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை கீர்த்தி சுரேஷ். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி ,ரெமோ , பைரவா , கானா சேர்ந்த கூட்டம் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ,
தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் நடிகை கீர்த்தி சுரேஷ் . ஆனால் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெறுவதற்குள் அவருடைய மார்க்கெட் அப்படியே சரியா தொடங்கியது. காரணம் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான குட்லக் சகி ,சாணிக்காயிதம், சர்க்காரு வாரி பட்டா,
வாசி போன்ற பல திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்தது. இதனால் இவரை வைத்து படம் எடுப்பதற்கு பலரும் யோசித்தார்கள் . அப்படி இருந்த நேரத்தில் தான் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் நடிகர் உதயநிதி ஸ்டாலின் . அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ,
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷும் நடித்திருந்தார் . ஆனால் இந்த திரைப்படம் பல்வேறு பாராட்டுகளை பெற்று வரும் நிலையில், கீர்த்தி சுரேஷை யாருமே கண்டு கொள்ளவில்லையாம் . காரணம் இந்த படத்தில் அவரின்,
கதாபாத்திரம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எடுபடவில்லை யாம் . மேலும் இந்த படத்தின் மூலம் தன்னுடைய பழைய மார்க்கெட்டை பிடிக்கலாம் என்று எண்ணிய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு இந்த திரைப்படமும் ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறது…