தமிழ் சினிமா உலகில் எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் இன்று தமிழ் மக்களுக்கு தெரிந்த ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வந்தவர் தான் மறைந்த நடிகர் மாரிமுத்து . பல வருடங்களாக சினிமாவில் இருந்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்தது தான் ஆச்சிரியமே . அப்படி இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ,
தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகர் மாரிமுத்து . இந்நிலையில் டப்பிங் பேசும்போது நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார் நடிகர் மாரிமுத்து. இவருடைய இறுதி சடங்கு எல்லாம் அவருடைய சொந்த ஊரில் தான் நடைபெற்றது .
இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இறப்பு குறித்து மாரிமுத்துவின் மகன் கூறியதாவது , இந்த நேரத்தில் என்னுடைய அப்பா இறந்தது எனக்கு சந்தோசம் தான் . காரணம் என்னுடைய அப்பா சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று பல நாட்கள் போராடினார் .
அதற்காக அவர் நிறைய கஷ்டப்பட்டார் . அப்படி அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக கஷ்டப்பட்டதற்கு சீரியல் மூலம் பலன் கிடைத்துவிட்டது. அவருடைய திறமையை நிரூபித்து விட்டு தான் சென்றுவிட்டார். இதனால் ஒரு விதத்தில் எங்களுக்கெல்லாம் சந்தோசம் தான் .
ஆனால் அவருடைய திறமை மக்களுக்கு தெரியாமல் இருந்திருந்தால் தான் எங்களுக்கு ரொம்ப வருத்தமாக இருந்திருக்கும் என்று உருக்கமாக பேசியிருந்தார் நடிகர் மாரிமுத்துவின் மகன்…