தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராகவும் , ஒளிப்பதிவாளராகவும் இருந்து வருபவர் மணிகண்டன் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மணிகண்டன் . இப்படி வெளியான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார் மணிகண்டன் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குற்றமே தண்டனை ,ஆண்டவன் கட்டளை,
கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியிருந்தார் . குறிப்பாக கடைசி விவசாயி படத்திற்காகவும் தேசிய விருதை வென்றிருந்தார் மணிகண்டன். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வீட்டிலிருந்து 5 சவரன் தங்க நகை ,
ஒரு லட்சம் பணம் மற்றும் மணிகண்டன் வாங்கிய தேசிய விருது ஆகியவை திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டது . இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கிறார் மணிகண்டன். மேலும் போலீசாரும் இது குறித்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இப்படி இருந்த நிலையில் இயக்குனர் மணிகண்டன் வீட்டில் ஒரு பையில் அவர் வாங்கிய தேசிய விருதுகளை போட்டு மன்னிப்பு கடிதம் ஒன்றையும் வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் திருடர்கள் . அந்த மன்னிப்பு கடிதத்தில் ஐயா ,எங்களை மன்னித்து விடுங்கள் ,
உங்கள் உழைப்பு உங்களுக்கு என்று எழுதி இருக்கின்றனர் . இதை பார்த்த ரசிகர்கள் திருடனுக்கு இப்படியொரு நல்ல மனசா என்று கூறி வருகின்றனர்…