மாரி செல்வராஜ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார். ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் மாரி செல்வராஜ் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் , உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . இப்படி இருக்கும் நிலையில் விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறினேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் .
அந்த வகையில் அவர் கூறியதாவது , நான் விஜய்யை சந்தித்து ஒரு கதையை கூறினேன். ஆனால் அவர் கதையை கேட்டுவிட்டு படத்தில் கமர்சியல் விஷயம் எதுவும் இல்லையா .?எனக்கு போய் இப்படி ஒரு கதையா என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு சென்றுவிட்டாராம்…