தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றனர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா. இதில் உள்ள எல்லா நடிகர்களின் படங்களும் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. இருந்தாலும் ரஜினி விஜய் , அஜித் சூர்யாவைப் பார்த்து அந்த விஷயத்தை கத்துக்கணும் . அந்த வகையில் சமீப காலமாக ஒரு சில படங்கள் மட்டும் தான் சுத்த தமிழ் பெயரில் இடம்பெறுகிறது.
அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் , ஜெயிலர் போன்ற திரைப்படங்கள் ஆங்கில வார்த்தையிலேயே இடம்பெற்றது. இவரை தொடர்ந்து நடிகர் விஜய்யின் படங்களான பிகில் , பீஸ்ட் , லியோ போன்ற திரைப்படங்களும் ஆங்கில வார்த்தையிலேயே இடம் பெற்றது .
ஆனால் தமிழ் சினிமாவில் அஜித் மற்றும் சூர்யா பல வருடமாகவே ஒரு கொள்கையை கடைபிடித்து வருகின்றனர். அது என்னவென்றால் தங்களுடைய படங்களுக்கு தொடர்ந்து தமிழில் டைட்டில் வைப்பதையே ஆசைப்படுகின்றனர் அஜித் சூர்யா . அந்த வகையில் காப்பான் ,
சூரரைப்போற்று ,எதற்கும் துணிந்தவன், புறநானூறு என்று தொடர்ச்சியாக தமிழ் வார்த்தையில் உள்ள படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் சூர்யா . இவரைப் போலவே நடிகர் அஜித்தும் என்னை அறிந்தால் ,விவேகம் ,விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை ,வலிமை ,
துணிவு , விடாமுயற்சி என்று தமிழ் தலைப்பு உள்ள படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார் . இதேபோல ரஜினியும் , விஜய்யும் செய்தால் தமிழின் அடையாளம் இந்தியா முழுவதும் பரவும் என்று கூறப்படுகிறது…