April 27, 2024

அஜித் ,சூர்யா மட்டும் தான் ஒழுக்கமானவர்கள்..!! குண்டை தூக்கிபோட்ட பிரபலம் ..!! அப்ப மற்ற நடிகர்கள் எல்லாம் ..??

சினிமாவை பொறுத்தவரை அட்ஜஸ்ட்மென்ட் என்ற தொல்லை பல வருடங்களாகவே இருந்து வருகிறது.  இது பெரும்பாலும் மற்ற மொழி சினிமாக்களில் மட்டுமே நடந்து வந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவிலும் இந்த அவல நிலை நடந்து வருகிறது.  அந்த வகையில் பல நடிகைகள் தற்போது தங்களுக்கு நடந்த கொடுமைகளை வெளிப்படையாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் விசித்ரா ,திரிஷா ,மனிஷா யாதவ் , பிந்து மாதவி போன்ற பல பிரபலங்களின்  பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.  இதனால் மன்சூர் அலிகான் முதல் தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா மற்றும் சிரஞ்சீவி சர்ச்சையில் சிக்கியுள்ளனர் .

இந்த சம்பவங்களால் தமிழ் சினிமாவில் ஒழுக்கமாக இருப்பது யார் என்ற கேள்வியே ரசிகர்களிடையே எழுந்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் ஒழுக்கமானவர்கள் என்றால் அது சிவக்குமார்,  அவருக்குப் பிறகு சூர்யா மற்றும் அஜித் தான் என்று வெளிப்படையாக,

கூறியுள்ளார் விமர்சகர் பிஸ்மி . அது மட்டுமல்லாமல் ஜோதிகாவும் பேட்டி ஒன்றில் மாதவன் ,சூர்யா , அஜித் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் போது தான் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன் என்றும் கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் அப்ப மற்ற நடிகர்கள் எல்லாம்  ஒழுக்கமானவர்கள் ,

இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *