தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சினேகா. கடந்த 2000-ம் ஆண்டு வெளியான என்னவளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சினேகா. முதல் படம் நல்ல வரவேற்பை பெறவில்லை என்றாலும் அடுத்தடுத்து இவர் நடித்த ஆனந்தம் ,பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, விரும்புகிறேன், வசீகரா ,
பார்த்திபன் கனவு ,வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப் போன்ற படங்கள் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தது . மேலும் ஆரம்பத்திலிருந்தே குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் சினேகாவுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே,
இருந்து வந்தது . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டு வந்தார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை சினேகா.
திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகன் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் 24 வருடங்களுக்கு மேலாக கலக்கிக்கொண்டு வரும் சினேகா தற்போது புதிய தொழில் ஒன்றை தொடங்க உள்ளாராம் . அந்த வகையில் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து,
“சினேகாலயா சில்க்ஸ்” என்ற துணிக்கடை ஒன்றை திறக்க உள்ளாராம் நடிகை சினேகா . அந்த கடையின் திறப்பு விழா வருகின்ற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளதாம். தற்போது சினேகாவின் புதிய கடையின் அழைப்புதல் பத்திரிக்கை இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…