ஐஸ்வர்யா லட்சுமி ஒரு பிரபலமான தமிழ் மற்றும் மலையாள திரைப்பட நடிகை ஆவார் .மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . இதன் பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,
தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம், சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி , ஆர்யா நடிப்பில் வெளியான கேப்டன், விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி . அதுமட்டுமல்லாமல் இயக்குனர் மணிரத்னம்,
இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இப்படி தமிழ் மற்றும் மலையாள மொழிப்படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டு வரும்,
நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில், அதை காட்டினால் தான் சினிமாவில் நீடிக்க முடியவில்லை என்று வெளிப்படையாக கூறியிருந்தார் . அந்த வகையில் அவர் கூறியதாவது, இப்போது உள்ள காலகட்டத்தில் நடிகைகள் கவர்ச்சிக்கு மாறுவது கட்டாயமான,
ஒன்றாக மாறிவிட்டது . குறிப்பாக கவர்ச்சி காட்ட வில்லை என்றால் சினிமாவில் நீடிக்க முடியாது என்று கூறியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.இதைப்பார்த்த ரசிகர்கள் என்ன இவங்களே இப்படி சொல்லிட்டாங்க என்று கூறிவருகின்றனர் …