சமீப காலமாக விஜய் படங்களுக்கு மட்டுமே அதிக பிரச்சனைகள் எழுந்து வருகிறது . இது இவருடைய ஒவ்வொரு படத்தின் ரிலீஸ் போதும் நடக்கும் சம்பவம் தான். இருந்தாலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். காரணம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அனுமதி தரவே இல்லை .
அதோடு இந்த படத்திற்கு 4 மணி காட்சி 7 மணி காட்சியும் கொடுக்கவில்லை . அப்படி பல தடைகளை தாண்டி வெளியான லியோ திரைப்படம் இன்று 500 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது . குறிப்பாக எந்த ஒரு ப்ரொமோஷனும் இல்லாமல் இந்த படம் இவ்வளவு வசூல் செய்தது,
சாதனை தான் . இப்படி இருக்கும் நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகர் விஜய் ரசிகர்களுக்காக குட்டி ஸ்டோரி சொல்ல வருகிறாராம் . அதாவது லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை தான் கொண்டாட முடியவில்லை,
வெற்றி விழாவை கண்டிப்பாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் தயாரிப்பாளர் லலித். இதனால் வருகின்ற நவம்பர் 1ஆம் படத்தின் வெற்றி விழா மேடை விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது .இதற்கான ஏற்பாடுகளை தற்போது,
தயாரிப்பாளர் செய்து வருகிறாராம் . இதனால் கண்டிப்பாக இந்த வெற்றி விழாவில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒரு செய்தி தற்போது ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது…