திரிஷா ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி நடிகை ஆவார். கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் அறிமுகமான திரிஷா தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். பின்னர் இடையில் சில காலம் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த திரிஷாவுக்கு சமீபத்தில் வெளியான,
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது . இதைஅடுத்து தற்போது லியோ ,தி ரோடு , ஐடென்டிட்டி என்று நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை திரிஷா . இப்படி இருக்கும் நிலையில் 40 வயதான திரிஷா 39 வயது நடிகருக்கு ,
அம்மாவாக நடிக்க உள்ளாராம் . அந்த வகையில் மோகன்லால், பிரித்திவிராஜ் , மீனா நடிப்பில் வெளியான ப்ரோ டாடி என்ற மலையாளத் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்களாம். அப்படி இந்த படத்தில் மோகன்லால்,
கதாபாத்திரத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருக்கிறாராம் . அவருக்கு மகனாக நடிகர் சர் வானந்த் நடிக்க உள்ளாராம் . இதில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகையான ஸ்ரீ லீலா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் 39 வயதான நடிகர் சர்வானத்துக்கு அம்மாவாக ,
மீனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம் நடிகை திரிஷா . இதற்கும் இருவருக்கும் இடையே ஒரு வயது தான் வித்தியாசம் . அப்படி இருக்கும்போது எப்படி அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு திரிஷா சம்மதித்தார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…