மிர்ச்சி செந்தில் ஓர் பிரபலமான தமிழ் சீரியல் நடிகர் மற்றும் ரேடியோ ஜாக்கி ஆவார். ஆரம்பத்தில் மிர்ச்சி ரேடியோவில் ஆர் ஜே வாக பணியாற்றி வந்த செந்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் நடிப்பில் வெளியான தவமாய் தவமிருந்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான,
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான் . இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி அந்த சீரியலில் நடிக்கும் போதே சக நடிகையான ஸ்ரீஜா சந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் மிர்ச்சி செந்தில் .
மேலும் திருமணமான பிறகும் பல திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் மிர்ச்சி செந்தில் . குறிப்பாக இவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் கழித்து சமீபத்தில் தான் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது .
மேலும் குழந்தை பிறந்து பல நாட்களாக வெளியில் காட்டாமல் இருந்து வந்த மிர்ச்சி செந்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…