April 22, 2024

50 வயதானாலும் சரி ..!! அதை செய்தபிறகு தான் திருமணம் ..!! 40 வயதில் சபதம் எடுத்த திரிஷா ..!!

தற்போது தமிழ் சினிமா உலகில் மிகவும் பிசியான நடிகை என்றால் அது நடிகை திரிஷா தான் . ஆரம்பத்தில் மாடல் அழகியாக இருந்து வந்த திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான மௌனம் பேசியதே என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர்  இந்த படத்தை தொடர்ந்து சாமி ,கில்லி, திருப்பாச்சி ,ஆறு, உனக்கும் எனக்கும், கிரீடம், அபியும் நானும் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ,

நடித்து  தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக கலக்கிக்கொண்டு வந்த திரிஷாவுக்கு ஒரு கட்டத்தில் சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் போனது.  இதன்பிறகு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் இவருக்கு ,

மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது என்று தான சொல்ல வேண்டும்  . குறிப்பாக  இந்த படத்திற்குப் பிறகு விஜய் உடன் லியோ ,அஜித்துடன் விடா முயற்சி , கமலுடன் தக் லைப் ,சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா  என்று  அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டானார்,

நடிகை திரிஷா . ஆனால் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகை திரிஷா . அதற்கு காரணம் என்னவென்றால் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வரும் நயன்தாராவின் இடத்தை பிடிக்காமல்,

திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுழன்று வருகிறாராம் திரிஷா.  மேலும் அது நடப்பதற்கு 50 வயதானாலும் பரவாயில்லை,  நான் நினைத்ததை செய்யாமல் கல்யாணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *