தற்போது தமிழ் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக மாறிவிட்டார் இயக்குனர் நெல்சன். கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த இயக்குனர் நெல்சன் தன்னுடைய முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து டாக்டர் மற்றும் பீஸ்ட் போன்ற படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் நெல்சன் . பின்னர் தன்னுடைய,
நாலாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் இணைந்தார் இயக்குனர் நெல்சன் . அப்படி சமீபத்தில் இவருடைய இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமில்லாமல் ஒரு வாரத்தில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து,
சாதனை படைத்து வருகிறது . இதனால் இயக்குனர் நெல்சன் அடுத்து எந்த நடிகரை வைத்து படம் எடுக்க போகிறார் என்று ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் இதுதான் சரியான நேரம் என்று இயக்குனர் நெல்சனுக்கு ,
கொக்கி போட்டுள்ளார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகர் சிவகார் த்திகேயன் தான் . ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் ஆனதும் இயக்குனர் நெல்சனுக்கு போன் போட்டு பேசிய சிவகார்த்திகேயன் நாம ரெண்டு பேரும் சேர்ந்து மீண்டும் ஒரு படம் பண்ணலாம் என்று,
கூறிவிட்டாராம் . ஏற்கனவே இவர்களுடைய கூட்டணியில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதைஅடுத்து இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி அமையுமா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் …