தமிழ் சினிமாவை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பிடிக்காத பிரபலங்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களும் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரை அடிக்கடி பார்ப்பதற்காகவே அவர் இருக்கும் போயஸ் கார்டனின் வீடு வாங்கியுள்ளார் ஒரு நடிகர்.
அவர் வேறு யாருமில்லை நடிகர் சந்தானம் தான் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் பின்னர் காமெடி நடிகராக அறிமுகமானார் . இப்படி அறிமுகமான குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி காமெடி நடிகராக ,
கொடி கட்டி பறந்து வந்தார் சந்தானம் . இதன் பிறகு காமெடி ரூட்டில் இருந்து ஹீரோ ரூட்டுக்கு மாறினார் சந்தானம். மேலும் சந்தானம் காமெடியனாக நடிக்கும் போது ரஜினியுடன் இணைந்து குசேலன் ,எந்திரன் ,லிங்கா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டாரின்,
தீவிர ரசிகராம் சந்தானம் . அப்படி சிறு வயதாக இருக்கும் போதே ரஜினியை பார்ப்பதற்காக போயஸ் கார்டனுக்கு தன்னுடைய நண்பர்களுடன் செல்வாராம் சந்தானம் . அப்போது தலைவர் இருக்கும் ஏரியாவில் நமக்கும் ஒரு வீடு இருந்தால் எப்படி இருக்கும் , அவரை அடிக்கடி பார்க்கலாமே என்று யோசித்த சந்தானம்,
பல வருட போராட்டங்களுக்குப் பிறகு போயஸ் கார்டனின் சொந்தமாக ஒரு வீட்டையே வாங்கியுள்ளாராம். அதன் விலை பல கோடிகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இந்த காலத்திலும் சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு ரசிகரா என்று கூறி வருகின்றனர்…