May 5, 2024

அப்பாவை எதிர்பார்க்காமல் ..!! சொந்த காலில் நிற்கும் அர்ஜுனின் இரண்டாவது மகள் ..!! இப்படியொரு தொழில் செய்கிறாரா ..??

தமிழ் சினிமா ரசிகர்களால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன் . கடந்த 1984 ஆம் ஆண்டு வெளியான நன்றி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அர்ஜுன் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக தொடர்ச்சியாக ஆக்சன் படங்களை தேர்வு செய்து நடித்து வந்ததால் ஆக்சன் கிங் என்று அழைக்கப்பட்டார் அர்ஜுன்.

இப்படி ஹீரோவாக கலக்கிக்கொண்டு வந்த அர்ஜுன் சேவகன், பிரதாப் ,ஜெய்ஹிந்த் ,சுயம்வரம் ,ஏழுமலை போன்ற பல படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதனிடையே நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அர்ஜூன் .

திருமணமான இவர்களுக்கு ஐஸ்வர்யா அர்ஜுன் , அஞ்சனா அர்ஜுன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் ஐஸ்வர்யா அர்ஜுன் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இதில் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா தற்போது ,

சொந்தமாக தொழில் செய்து வருகிறாராம் . அந்த வகையில் பழங்கள் , காய்கறிகளில் இருந்து ஹேண்ட் பேக் செய்து விற்பனை செய்து வருகிறாராம் அர்ஜுனனின் மகள் . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *