தமிழ் சினிமா உலகில் திறமை இருந்தும் ஒரு சில நடிகர்களால் மேலே வர முடியவில்லை . அந்த வகையில் பல பேரை கூறலாம். அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகர் விக்ராந்த். நடிகர் விஜய்யின் சித்தி பையனான விக்ராந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முதல் கனவே ,நெஞ்சத்தை கிள்ளாதே, கோரிப்பாளையம்,
முத்துக்கு முத்தாக, பாண்டியநாடு ,கெத்து போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . குறிப்பாக 15 படங்களுக்கு மேல் நடித்தும் கூட இவருக்கு என்று ஒரு தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாக்கியுள்ள லால் சலாம் படத்தில் ,
ஒரு முக்கிய இடத்தில் நடித்திருக்கிறார் நடிகர் விக்ராந்த் . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அண்ணன் விஜய் குறித்து கூறியதாவது, கடந்த சில வருடங்களாக தான் என்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் விஜய் அண்ணாவை பற்றி கேட்காமல்,
இருக்கிறார்கள். மேலும் நான் விஜய் என்கிற பெரிய நடிகரோட தம்பி என்பதால் எல்லோருடைய கவனமும் என்னுடைய அண்ணன் மீது தான் இருக்கிறது . அப்படி ஆரம்பத்தில் என்னிடம் கதை சொல்ல வரும் பல இயக்குனர்கள் விஜய் சாரை ஒரு ரோலில் நடிக்க சொல்லுங்க,
அவரை படத்தைப் பற்றி பேச சொல்லுங்க , ஒரே ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆட சொல்லுங்க, படத்தோட இசை வெளியீட்டு விழாவிற்கு மட்டும் அவரை எப்படியாவது கூட்டிட்டு வாங்க என்று கேட்பார்கள். இதனாலேயே இதுக்கெல்லாம் மறுப்பு தெரிவித்து நான் பல படங்களை,
தவற விட்டிருக்கிறேன் . அதில் தரமான படங்களும் உண்டு . மேலும் என்னுடைய அண்ணா எனக்கு தனிப்பட்ட முறையில் பல உதவிகளை செய்து இருக்காரு . ஆனால் சினிமா சம்பந்தமா நான் அவரிடம் இதுவரை எந்த உதவியும் கேட்டதில்லை என்று கூறியிருந்தார் நடிகர் விக்ராந்த்…