இன்று நடிகர் விஜய் வெளியிட்ட அரசியல் அறிக்கை சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் வருகிறேன் என்று ரசிகர்களை ஏமாற்றியது போல விஜய்யும் ரசிகர்களை ஏமாற்றி விடுவார் என்று பலரும் நினைத்தனர் . ஆனால் சொன்னபடியே அரசியலுக்கு வந்து விட்டார் நடிகர் விஜய். அந்த வகையில் “தமிழக வெற்றி கழகம்” என்ற,
பெயரில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியிருக்கிறார் நடிகர் விஜய் . மேலும் அரசியலுக்கு பொழுதுபோக்குக்காக வரவில்லை என்றும் தனக்கென ஒரு சமூகப் பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார் விஜய். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ,
எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் கூறியிருந்தார் விஜய். அதோடு கமீட்டான படங்களை முடித்தவுடன் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்துள்ளார் விஜய் . இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் அறிக்கையை பார்த்த சினிமா பிரபலங்கள்,
முதல் அரசியல் பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் . இதில் ஸ்பெஷலான வாழ்த்து என்னவென்றால் விஜய்யின் அம்மா சொல்லிய வாழ்த்து தான் . அந்த வகையில் விஜய் கட்சி தொடங்கியதும் முதல் ஆளாக போன் செய்து ,
விஜய் உனக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லையப்பா, கேரியான் , ஆல் தி பெஸ்ட் ,வாகை சூடு விஜய் என்று மகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் ஷோபா சந்திரசேகர்…