பொதுவாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் ஏராளம் உண்டு. குறிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து இப்போது பல பேர் நடிகர் நடிகைகளாக கலக்கி கொண்டு வருகின்றனர் . அந்த வகையில் பூர்ணிமா ரவியும் ஒருவராவார் . ஆரம்பத்தில் யூடியூப் மூலம் பிரபலமான பூர்ணிமா ரவி பின்னர் தமிழில் வெளியான ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார் .
இதையடுத்து பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்து கொண்டார் பூர்ணிமா . மேலும் ஆரம்பத்தில் இருந்தே மாயாவுக்கு ஜால்ரா அடித்து ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் பூர்ணிமா . அது மட்டுமில்லாமல் பிரதீப் வெளியேறியதற்கு இவரும் ஒரு முக்கிய காரணமாவார் .
இந்நிலையில் பணப்பெட்டி டாஸ்க் வந்ததும் பதினாறு லட்சம் மதிப்புள்ள பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் பூர்ணிமா. அதோடு 16 லட்சம் இல்லாமல் சம்பளம் 13 லட்சம் கிடைத்திருக்கிறது. மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு வருவதற்கு,
முன்பே செவப்பி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் பூர்ணிமா . இதை அடுத்து அடுத்த படத்தில் கதாநாயகியாக கமிட் ஆகியிருக்கிறார் பூர்ணிமா ரவி . இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற அறிவிப்பும் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பும் விரைவில் ,
வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது . குறிப்பாக டைட்டில் வின்னர் வென்ற அர்ச்சனாவது கூட இன்னும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை . ஆனால் பாதியிலேயே வெளியேறிய பூர்ணிமாவுக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…