April 30, 2024

அன்று ரஜினி சொன்னதை கேட்டிருந்தால் ..!! இன்று 12 வீட்டுக்கு ஓனராக இருந்திருப்பேன் ..!! இப்போது புலம்பித்தள்ளும் செந்தில் ..!!

80 , 90களில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக கலக்கிக்கொண்டு வந்தவர் தான் செந்தில் . குறிப்பாக இவரும் , கவுண்டமணியும் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு செந்தில் என்றால் ரொம்ப பிரியமாம் . காரணம் அவர் எதையும் மனதில் வைத்து பேச மாட்டாராம்.  ரொம்ப கள்ளம் கபடம் இல்லாத மனிதராம்.

இதனாலேயே தன்னுடைய பல படங்களில் அவரை ஒரு தனி காமெடியனாகவே நடிக்க வைத்திருப்பார் ரஜினிகாந்த் . அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த தர்மதுரை, வேலைக்காரன், அருணாச்சலம் ,முத்து, படையப்பா போன்ற பல படங்களில் இவர்களுடைய கூட்டணி,

ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இதை அடுத்து பல வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ள லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார் செந்தில்.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய செந்தில் சூப்பர் ஸ்டார் குறித்து,

கூறியதாவது , பல வருடங்களுக்கு முன்பே ரஜினிகாந்த் என்னிடம் , செந்தில் ஒரு படத்தை தயாரிங்கள் ,அதில் நானே ஹீரோவாக நடிக்கிறேன் என்று கூறினார் . ஆனால் அப்போது நான் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்தேன்.  அதனால் இதுவே எனக்கு போதும் .

தயாரிப்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று அவரிடம் கூறிவிட்டேன்.  ஆனால் இப்போதுதான் அதனுடைய மதிப்பு எனக்கு தெரிகிறது.  அப்போது மட்டும் அவர் சொன்னபடி செய்திருந்தால் இன்று சாலிகிராமத்தில் 12 வீட்டுக்கு மேல் வாங்கி இருப்பேன் என்று கூறியிருந்தார் செந்தில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *