கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு பிறகு வடிவேலுவின் நிஜ முகத்தை பிரபலங்களும் , ரசிகர்களும் புட்டு புட்டு வைத்து வருகின்றனர். இன்னும் சொல்லப் போனால் கேப்டன் விஜயகாந்தின் இறப்பிற்கு வராததால் பல பேர் வடிவேலு மீது செம கோபத்தில் இருந்து வருகின்றனர் . மேலும் ஆரம்ப காலகட்டங்களில் வடிவேலுவுக்கு பட வாய்ப்புகளை கொடுத்து உதவி செய்திருந்தார் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் .
ஆனால் அவர் செய்த நன்றியை கொஞ்சமும் யோசிக்காமல் விஜயகாந்தை மோசமாக விமர்சித்து இருந்தார்வடிவேலு . என்னதான் வடிவேலு இவர் மீது வெறுப்பை காட்டினாலும் , கேப்டன் விஜயகாந்த் ஒருபோதும் வடிவேலுவிடம் வெறுப்பை காட்டியது கிடையாதாம் .
இன்னும் சொல்ல போனால் வடிவேலு கருப்பு கண்ணாடி பயன்படுத்துவதற்கு காரணமும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தானாம் . காரணம் இருவரும் ஒரே ஊரில் இருப்பதால் அடிக்கடி சந்திப்பதற்கு நேரிடலாம் , அந்த நேரத்தில் கண்ணாடி போட்டுக் கொண்டால் நாம் யாரை பார்ப்போம் ,
என்பது யாருக்கும் தெரியாது என்பதால் தான் கண்ணாடி போட்டுக் கொண்டாராம் வடிவேலு . அது மட்டுமல்லாமல் ஒரு முறை ஒரே இடத்தில் வடிவேலுவும் ,விஜயகாந்தும் சந்தித்திருக்கின்றனர். அப்போது வடிவேலு ஒரு நிமிடம் பயந்து போய் விட்டாராம் . ஆனால் கேப்டன் விஜயகாந்த்,
என்ன வடிவேலு எப்படி இருக்க என்று கேட்டாராம் . உடனே வடிவேலு நல்லா இருக்கேன் என்று சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு காலி செய்து விட்டாராம்…