ரவீந்தர் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். சுட்ட கதை என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார் ரவீந்தர் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நளனும் நந்தினியும் ,நட்புனா என்னன்னு தெரியுமா ,முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருந்தார் ரவீந்தர் . அது மட்டுமல்லாமல் ஒரு படத்தையும் இயக்கியிருக்கிறார் ரவீந்தர் .
இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான ரவீந்தர் பிரபல சீரியல் நடிகையான மகாலட்சுமியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் . இவர்களுடைய திடீர் திருமணம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது . குறிப்பாக பலரும் இவர்களை,
கேலி கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருவரும் நன்றாகத் தான் வாழ்ந்து வந்தனர். இப்படி இருந்த நிலையில் சமீபத்தில் 16 கோடி பண மோசடி செய்த வழக்கில் கைதானார் ரவீந்தர் . இதை கேட்ட பலரும் ரவீந்தர் இப்படிப்பட்டவரா .? என்று ,
கேள்விஎழுப்பி வந்தனர் . மேலும் பலமுறை ஜாமின் போட்டும் தள்ளுபடி செய்த நிலையில் தற்போது ரவீந்தருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது நீதிமன்றம். தற்போது வீடு திரும்பிய ரவீந்தரின் புகைப்படத்தை பகிர்ந்து உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்ற ,
ஒரு உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் நடிகை மகாலட்சுமி. அவர் போட்ட பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …
View this post on Instagram