ஒரு காலகட்டத்தில் ரஜினி, கமலுக்கு இணையாக கொடி கட்டி பறந்து வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . மேலும் ஒரு காலத்தில் கருப்பாக இருக்கும் நடிகர்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க முடியாது என்ற எழுதப்படாத விதியை தகர்த்தெறிந்தவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் , விஜயகாந்தும் . இப்படி இருக்கும் நிலையில் கருப்பாக இருக்கும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் ,
என்று சொல்லிய நடிகையை நேரம் பார்த்து பழிவாங்கி இருக்கிறார் விஜயகாந்த் . அந்த வகையில் 80 , 90களில் பிரபல நடிகையாக கலக்கிக் கொண்டு வந்தவர் தான் நடிகை நதியா. இவர் ஆரம்பத்திலிருந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்தார் .
இதனாலேயே இவர் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார். இப்படி இருக்கும் நிலையில் விஜயகாந்த் , ரஜினிகாந்த் போன்ற நடிகர்களுடன் இணைந்து ஒரு படங்களில் மட்டுமே நடித்திருந்தார் நடிகை நதியா . அதுவும் நதியாவை கட்டாயப்படுத்தி தான் அந்த படங்களில் ,
நடிக்க வைத்தார்களாம் . அதற்கு காரணம் கருப்பாக இருக்கும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன் என்று உறுதியாக இருந்திருக்கிறார் நடிகை நதியா. இப்படி இருந்த நேரத்தில் தான் நதியாவை பழிவாங்கும் விதமாக கேரளாவில் இருந்து வந்த நடிகை ஷோபனாவை,
பாட்டுக்கு ஒரு தலைவன் என்ற படத்தில் நடிக்க வைத்திருந்தார் கேப்டன் விஜயகாந்த். பின்னர் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து பொன்மன செல்வன் ,எங்கிட்ட மோதாதே போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…