கடந்த 23ஆம் தேதி மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் தி கோர் பிரபல மலையாளத் திரைப்பட இயக்குனரான ஜோ பேபி இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜோதிகா ,முத்துமணி, கலாபவன் ஹனி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான இந்த திரைப்படம் ,
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் மம்முட்டி மற்றும் ஜோதிகாவின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்து திரையரங்கிலேயே கதறி கதறி அழுதேன் என்று கூறியிருக்கிறார்,
பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தான் . மலையாள படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா லட்சுமி விஷால் நடிப்பில் வெளியான ஆக்சன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜகமே தந்திரம் ,புத்தம் புது காலை விடியாதா ,கார்கி ,கேப்டன் ,பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இப்படி இருக்கும் நிலையில் காதல் தி கோர் படத்தை பார்த்த ,
ஐஸ்வர்யா லட்சுமி தன்னுடைய உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் அப்ப இந்த படத்தைப் பார்த்து தீரனும் என்று கூறி வருகின்றனர்…
.@mammukka you continue to amaze, i felt the pain, the loneliness, the fear ,the weight of the decisions you had to take and every single look tugged at my heart. Best part of the movie for me was that “Ente daivame” in the second half.
Cried like a baby in the theatre. pic.twitter.com/5JCDwr5va0— Aishwarya Lekshmi (@aishwaryaleksh7) November 26, 2023