நடிகர் விஜய் விரைவில் அரசியலில் முழு வீச்சாக களமிறங்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . யாருமே எதிர்பார்க்காத நேரம் பார்த்து தன்னுடைய ” தமிழக வெற்றி கழகம் ” கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் நடிகர் விஜய் . மேலும் முழு நேர அரசியலில் களமிறங்க உள்ளதால் இன்னும் ஒரு படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவை விட்டு விஜய் விலகி விடுவார் என்று கூறப்படுகிறது.
தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் விஜய். இதை முடித்த கையோடு ஒரு அரசியல் படத்தில் நடித்துவிட்டு சினிமாவை விட்டு விலக உள்ளாராம் நடிகர் விஜய் .
அந்தப் படத்தை இயக்கப் போவது இயக்குனர் எச் வினோத் தானாம் . அந்த வகையில் தமிழில் வெளியான சதுரங்க வேட்டை , தீரன் அதிகாரம் ஒன்று , நேர்கொண்ட பார்வை , துணிவு போன்ற தரமான படங்களை இயக்கி பிரபலமானவர் தான் இயக்குனர் எச் வினோத் .
இவர் சமீபத்தில் விஜய்யிடம் அரசியல் சார்ந்த ஒரு கதையை கூறியிருக்கிறார் . அந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்துப் போனதாம். குறிப்பாக இந்த கதை கமலுக்காக எழுதப்பட்ட கதையாம் . இதனால் விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
மறுபுறம் அட்லீ அல்லது கார்த்தி சுப்புராஜ்க்கு விஜய் வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது . இதில் யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் அரசியல் கதை உறுதி என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை …