90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கனகா . மூத்த நடிகையான தேவிகாவின் மகளான கனகா கடந்த 1989 ஆம் ஆண்டு ராமராஜன் நடிப்பில் வெளியான கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய அழகால் ஈர்த்துவிட்டார் நடிகை கனகா.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தங்கமான ராசா, அதிசய பிறவி, அம்மன் கோவில் திருவிழா ,கும்பக்கரை தங்கையா, வியட்நாம் காலனி, சக்திவேல், பெரிய குடும்பம் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கனகா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,
மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை விட்டு விலகினார் நடிகை கனகா. இன்னும் சொல்லப்போனால் தற்போது எங்கு இருக்கிறார் .? என்ன ஆனார் .? என்ற தகவல் கூட இல்லாமல் ,
இருந்து வந்தது . மேலும் கனகா யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வீட்டில் வசித்து வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டது . இப்படி இருக்கும் நிலையில் வெளியில் முகத்தை காட்டாமல் இருந்து வந்த கனகாவை தேடி கண்டுபிடித்து புகைப்படம் எடுத்திருக்கிறார்,
நடிகை குட்டி பத்மினி . அந்தப் புகைப்படம் இணையத்தை கலக்கி கொண்டு வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நடிகை கனகாவா இது .? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே என்று கூறி வருகின்றனர்…