May 4, 2024

சின்ன பொண்ணுன்னு நினைச்சீங்களா ..?? ரெண்டு குழந்தையே இருக்கு ..!! குடும்ப புகைப்படங்களை பகிர்ந்த சரண்யா மோகன் ..!!

என்றும் குழந்தை குணம் மாறாத நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சரண்யா மோகன் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக கலக்கிக்கொண்டு வந்த சரண்யா மோகன் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . இந்த திரைப்படம் இவரை பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கியது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ,

ஜெயம் கொண்டான், மகேஷ் சரண்யா மற்றும் பலர், பஞ்சாமிர்தம்,அ ஆ இ ஈ, வெண்ணிலா கபடி குழு ,ஈரம் ,அழகர்சாமியின் குதிரை ,வேலாயுதம் ,ஒஸ்தி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம்,

கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வந்தார் . குறிப்பாக இவருடைய குழந்தைத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே  கடந்த 2015 ஆம் ஆண்டு அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை,

திருமணம் செய்து கொண்டார் நடிகை சரண்யா மோகன் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் சரண்யா மோகன் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை,

பதிவிட்டுள்ளார் . இதைப் பார்த்த ரசிகர்கள் சின்ன பொண்ணுன்னு நினைச்சா.? இவருக்கே இரண்டு குழந்தைகள் இருக்கா.? என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர் . இதோ அவரின் குடும்ப புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *