கே பி ஒய் பாலா பிரபலமான விஜய் டிவி பிரபலம் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார் பாலா . இதன்பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்னுடைய டைமிங் காமெடியால் கவர்ந்து விட்டார் பாலா. இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிக்கும்,
வாய்ப்பும் அமைந்தது. அந்த வகையில் வெளித்திரையில் வெளியான ஜூங்கா ,தும்பா , சிக்சர், புலிகுத்தி பாண்டி, லாபம் ,நாய் சேகர், தேஜாவு , ரன் பேபி ரன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் கே பி ஒய் பாலா. இப்படி தன்னுடைய நகைச்சுவையால் ரசிகர்களை,
கவர்ந்து வரும் பாலா நிஜ வாழ்க்கையில் ஒரு ரியல் ஹீரோவாகவே வாழ்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். காரணம் ஏற்கனவே மூன்று இலவச ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்திருந்த பாலா தற்போது நாலாவது முறையாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது. மேலும் சினிமாவில் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர்களே செய்யாத விஷயத்தை கே பி ஒய் பாலா செய்துள்ளதால் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்…