தமிழ் சினிமா உலகில் கடந்த 1995 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆசை . இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை பூஜா பத்ரா. பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் வெளியான ஒருவன் , மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்,
போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை பூஜா பத்ரா . மேலும் இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் , பஞ்சாபி மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே கடந்த 2002 ஆம் ஆண்டு சோனு ,
என்பவரை திருமணம் செய்து கொண்டார் . பின்னர் திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து விவாகரத்து செய்த பூஜா பத்ரா பின்னர் வில்லன் நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் . இப்படி இருக்கும் நிலையில் அடிக்கடி கணவரை மாற்றும் பூஜா பத்ராவிடம்,
இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர் . அதற்கு பதிலளித்த பூஜா பத்ரா கூறியதாவது, நாங்கள் சுதந்திரமான பெண்கள் ,குறிப்பாக மகளிர் விடுதலையில் நாட்டம் உள்ளவர்கள் . நாங்கள் என்ன நினைக்கிறோமோ , அதை உடனே செயல்படுத்துவோம் . அப்படி கணவர் சரியாக இருந்தால்,
வைத்துக் கொள்வோம் , இல்லையென்றால் வெட்டி விடுவோம் என்று கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதனால் இவருக்கு இனி பட வாய்ப்பு வருமா என்பது சந்தேகம்தான் என்றும் கூறப்படுகிறது…