April 27, 2024

ஒரு வேளை சாப்பாட்டுக்காக ..!! எல்லார் முன்னாடியும் அவமானப்பட்ட விஜயகாந்த் ..!! இதனால் தான் எல்லோருக்கும் கறி சோறு போட்டாரா ..?? கலங்க வைத்த தகவல் ..!!

தமிழ் சினிமாவில் இருக்கும் தங்கமான நடிகர்களில் ஒருவர் தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.  பிறப்பால் பணக்கார வீட்டுப்பிள்ளையாக பிறந்தாலும் சினிமா மீது இருந்த ஆர்வத்தில் சென்னைக்கு கிளம்பி வந்தார் விஜயகாந்த் . அதன் பிறகு வாய்ப்பு கிடைக்காமல் அவர் பட்ட கஷ்டம் அந்தக் கடவுளுக்கு தான் தெரியும்.  பின்னர் பல வருட போராட்டத்திற்குப் பிறகு நடிகராக அறிமுகமானார் விஜயகாந்த் .இதன் பிறகு ,

குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தன்னுடைய விடாமுயற்சியின் மூலம் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் .  ஒரு நடிகராக ரசிகர்களை கவர்ந்தாலும் நாட்கள் போக போக ஒரு நல்ல மனிதராக ரசிகர்கள் மனதில் வாழ்ந்து வந்தார் விஜயகாந்த்.குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில், ஒருவேளை சாப்பாட்டுக்கே ,

விஜயகாந்த் பல அவமானங்களை சந்தித்து இருக்கிறாராம் . அந்த வகையில் இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் போது படப்பிடிப்பிற்கு தயாராக இருந்தாராம் . ஆனால் கதாநாயகி வருவதற்கு தாமதமானதால் விஜயகாந்த் சாப்பிட போய்விட்டாராம் .இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர்,

ஹீரோயின் வளர்வதற்குள் உனக்கு என்ன அவசரம் என்று அனைவரது முன்பும் கேட்டாராம்.  அது மட்டுமல்லாமல் இன்னொரு படத்தின் படப்பிடிப்பில் பசி எடுக்குது சாப்பாட்டை மேலே கொண்டு வாங்க என்று சொல்லி இருக்கிறார் விஜயகாந்த் .  ஆனால் இவர் பெரிய இவரு கீழே வந்து சாப்பிட மாட்டாரா,

என்று அவருடைய காது படவே பேசினார்களாம் . இப்படி ஒருவேளை சாப்பாட்டின் அருமை தெரிந்த விஜயகாந்த் நடிகரான பிறகு தன்னுடைய படப்பிடிப்பில் இருக்கும் அனைவருக்கும் வாழை இலையில் கறி சோறு போட்டு வயிறு குலுற வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *