April 26, 2024

என்னுடைய உயிர் அவருடைய மடியில் தான் பிரிய வேண்டும்..!! 81 வயதில் உருக்கமாக பேசிய சிவகுமார் ..!! பிள்ளைகளை தாண்டி அவர் மீது இருக்கும் அளவற்ற அன்பு ..!!

தமிழ் சினிமா உலகில் 70, 80 களில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் சிவகுமார் . கடந்த 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் சிவக்குமார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  மேலும் இவர் எம்ஜிஆர், சிவாஜி ,ஜெமினி ,ரஜினி, கமல், விஜயகாந்த் ,

சத்யராஜ், அஜித், விஜய்,  விக்ரம் என்று மூன்று தலைமுறை நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் நடிகர் சிவகுமார் .  ஆனால் கடந்த 22 வருடமாக சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் நடிகர் சிவகுமார் . இதனிடையே லட்சுமி குமாரி என்பவரை திருமணம் செய்து கொண்ட சிவகுமாருக்கு,

இரண்டு மகன்கள் ,ஒரு மகள் உள்ளனர்.  இதில் இரண்டு மகன்களுமே தற்போது தமிழ் சினிமாவையே கலக்கி கொண்டு வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகுமார் , என்னுடைய உயிர் அவருடைய மடியில்தான் பிரிய வேண்டும்,

என்று உருக்கமாக பேசியிருந்தார்.  அவர் வேறு யாருமில்லை அவருடைய மனைவி தான் . அந்த வகையில் எனக்கு இரண்டாவது தாயாக இருந்தது என்னுடைய மனைவிதான் . அதனால் என்னுடைய மனைவியின் மடியிலேயே என்னுடைய உயிர் பிரிய வேண்டும் என்று விரும்புகிறேன் ,

என்று கூறியிருந்தார் நடிகர் சிவகுமார் . இதைப் பார்த்த ரசிகர்கள் 81 வயது ஆகியும் மனைவி மீது இருக்கும் அன்பு இவருக்கு குறையவே இல்லை  என்று  நெகிழ்ச்சியில் கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *