நேற்று முன் தினம் மாரடைப்பால் திடீரென உயிரிழந்த நடிகர் மாரிமுத்துவின் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . ஆரம்பத்தில் ஒரு சில படங்களை இயக்கிய மாரிமுத்து பின்னர் பல தமிழ் படங்களில் நடித்திருந்தார். இதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஏஜிஎஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் .
இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலுக்காக டப்பிங் பேசும்போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்கிறது . இதன் பிறகு அவரே கார் ஒட்டி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார் . பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந் நிலையில்,
நடிகர் மாரிமுத்துவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கூறியதாவது , அவருக்கு நெஞ்சுவலி வந்த பிறகு அந்த ஸ்டூடியோவில் இருந்து அவரே கார் ஓட்டி வந்திருக்கிறார். குறிப்பாக மருத்துவமனை வந்ததும் அவரால் காரில் இருந்து கூட இறங்க முடியவில்லையாம். காரிலேயே நினைவிழந்த,
மாரிமுத்துவுக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆனால் அவருக்கு பல்ஸ் சுத்தமாக இல்லை. இதனால் அவரை எங்களால் காப்பாற்ற முடியவில்லை . ஆனால் அவர் இதை பண்ணியிருந்தால் அவரைக் காப்பாற்றி இருக்கலாம் . அது என்னவென்றால் மாரிமுத்து கார் ஓட்டி வந்தது,
தான் தவறு. அவருக்கு ஏற்கனவே இதயத்தில் பிரச்சனை இருந்திருக்கிறது . அதனால் அவர் 108 ஆம்புலன்ஸில் கூட வந்திருக்கலாம் அல்லது வேறு யாராவது கூட்டிக்கொண்டு அவர் வந்திருந்தால் கண்டிப்பாக அவரை காப்பாற்றி இருக்கலாம் என்று கூறியிருந்தார்…