April 27, 2024

பிரசாந்துக்கு எதிரி வெளியில இல்லை ..!! கூடவே தான் இருக்கிறார்..!! அப்பா பேச்சை கேட்டு ..!! நல்ல வாய்ப்பை இழக்கப்போகும் பிரசாந்த் ..!!

90களில் தமிழ் சினிமாவை கலக்கிய டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார் நடிகர் பிரசாந்த் . வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா , ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள்,  என்று பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் . குறிப்பாக தொடர்ந்து காதலுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை ,

தேர்வு செய்து நடித்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்டு ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினார்.  ஆனால் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரசாந்தின் மார்க்கெட் குறைய தொடங்கியது.

இந்நிலையில் நாலு வருடங்கள் கழித்து அந்த கண் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் பிரசாந்த் .  இதைத்தொடர்ந்து தளபதி 68 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரசாந்தை கேட்டிருக்கின்றனர் . ஆனால் இந்த படமும் அவருடைய அப்பாவால் பறிபோய்விடும்,

என்று தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் பிரசாந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு  இரண்டு கண்டிஷன் போட்டுள்ளாராம் தியாகராஜன்.  அதாவது பிரசாந்த் இந்த படத்தில் நடிக்கும் எந்த காட்சிகளையும் நீக்கவே கூடாது என்று  கூறிவிட்டாராம் . அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தை,

சாக்காக வைத்து அந்தகண்  படத்திற்கு ப்ரமோஷன் செய்துவிடலாம் என்றும் பிளான் போட்டு உள்ளராம் தியாகராஜன் . இதை பார்த்த ரசிகர்கள் பிரசாந்துக்கு எதிரி வெளியில இல்லை கூடவே தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *