90களில் தமிழ் சினிமாவை கலக்கிய டாப் நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார் நடிகர் பிரசாந்த் . வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான பிரசாந்த் தொடர்ந்து வண்ண வண்ண பூக்கள், திருடா திருடா , ஆணழகன், ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், என்று பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் . குறிப்பாக தொடர்ந்து காதலுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை ,
தேர்வு செய்து நடித்து வந்த பிரசாந்த் ஒரு கட்டத்தில் தன்னுடைய தந்தையின் பேச்சைக் கேட்டு ஆக்சன் படங்களில் நடிக்க தொடங்கினார். ஆனால் அதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை . இதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பிரசாந்தின் மார்க்கெட் குறைய தொடங்கியது.
இந்நிலையில் நாலு வருடங்கள் கழித்து அந்த கண் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் பிரசாந்த் . இதைத்தொடர்ந்து தளபதி 68 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு பிரசாந்தை கேட்டிருக்கின்றனர் . ஆனால் இந்த படமும் அவருடைய அப்பாவால் பறிபோய்விடும்,
என்று தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் பிரசாந்த் இந்த படத்தில் நடிப்பதற்கு இரண்டு கண்டிஷன் போட்டுள்ளாராம் தியாகராஜன். அதாவது பிரசாந்த் இந்த படத்தில் நடிக்கும் எந்த காட்சிகளையும் நீக்கவே கூடாது என்று கூறிவிட்டாராம் . அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தை,
சாக்காக வைத்து அந்தகண் படத்திற்கு ப்ரமோஷன் செய்துவிடலாம் என்றும் பிளான் போட்டு உள்ளராம் தியாகராஜன் . இதை பார்த்த ரசிகர்கள் பிரசாந்துக்கு எதிரி வெளியில இல்லை கூடவே தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்…