இசைஞானி இளையராஜாவின் அன்பு மகளான பவதாரணி நேற்று முன்தினம் திடீரென இறந்து விட்டார். இவருடைய திடீர் மரணம் பிரபலங்களையும் , ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . ஆனால் மகளின் மரணத்தை ஒரு மாதத்திற்கு முன்பே கணித்து விட்டாராம் இளையராஜா . அந்த வகையில் சடங்கு, சம்பிரதாயங்களை பெரிய அளவில் கடைப்பிடிப்பவர் இளையராஜா .
அது மட்டுமல்லாமல் இவருக்கு தெய்வ நம்பிக்கையும் அதிகம் . இந்நிலையில் பண்ணைபுரத்தில் இருக்கும் அவருடைய மனைவி கல்லறைக்கு இந்த வருடம் தரும் திதியை அவரால் தர முடியாமல் போய்விட்டதாம். இதுவே இவருக்கு ஒரு பயத்தினை ஏற்படுத்தி இருக்கிறது .
அது மட்டுமல்லாமல் கார்த்திகை தீபத்திருநாளில் இளையராஜாவின் வீடு எப்போதும் விளக்குகளால் ஜொலிக்குமாம் . ஆனால் இந்த முறை அவருடைய வீட்டில் லைட் போட கூட ஆள் இல்லாத நிலை ஏற்பட்டதாம் . இதனாலேயே ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது,
என்ற பயம் இளையராஜாவுக்கு தோன்றி இருக்கிறது. அந்த நேரத்தில்தான் பவதாரணிக்கு கல்லீரல் புற்றுநோய் என்ற செய்தி இளையராஜாவுக்கு வந்திருக்கிறது . இதை கேட்டதும் துடித்து போன இளையராஜா மகளுடன் மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார் . இதன்பிறகு,
சில நாட்களிலேயே மூச்சு தினறல் ஏற்பட்டு பவதாரணி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் தன்னுடைய குயில் போன்ற குரலால் பல பேரின் மனதை உருக வைத்த பவதாரணியின் திடீர் இறப்பை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்…