தமிழ் சினிமா உலகில் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனர் டி ஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் . இந்த படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . அப்படி இந்தப் படத்தில் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை லிஜோ மோல் ஜோஸ் . இவர் இந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கும்,
இந்த படத்தின் மூலம் பெயர் புகழை சம்பாதித்தார் நடிகை லிஜோ மோல் ஜோஸ் . மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய நடிகை லிஜோ மோல் ஜோஸ் கடந்த 2019 ஆம் ஆண்டு சித்தார்த் , ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை,
என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து தீதும் நன்றும், புத்தம் புது காலை விடியாதா, அன்னபூரணி, காதல் என்பது பொதுவுடமை போன்ற பல தமிழ் படங்களில் நடித்திருந்தார் நடிகை லிஜோ மோல் ஜோஸ் .
மேலும் இவர் தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் மாறி மாறி நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…