தமிழ் சினிமாவில் நெப்போர்ட்டிசம் பரவி வருவதாக பலரும் கொந்தளித்து வருகின்றனர். மேலும் வாரிசு நடிகர்களின் வரத்து தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அப்படி நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம் பெற்ற பாடலில் வந்திருப்பார் .
இப்படி இருக்கும் நிலையில் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்த சஞ்சய் தமிழ்நாடு திரும்பியதும் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு இயக்குனராக ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் அவருடைய அப்பா பெரிய நடிகர் என்பதால் தான் ,
இவருக்கு இவ்வளவு எளிதில் வாய்ப்பு கிடைத்ததாக பலரும் கூறி வந்தனர். ஆனால் நடிகர் விஜய் அவருடைய மகனுக்கு தண்ணி தெளித்து அனுப்பி வைத்தது போல தான் தெரிகிறது. இதுவரை விஜய் அவருடைய மகன் குறித்து எந்த ஒரு மேடையிலும் பேசியது கிடையாது.
இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் மகனுக்கு அஜித் செய்த உதவி வெளியில் தெரிந்துள்ளது . அந்த வகையில் அஜித்தின் பிஆர்ஓவாக இருந்து வரும் சுரேஷ் சந்திரா தான் . விஜய்யின் மகன் இயக்கும் படத்திற்கும் பிஆர்ஓவாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாராம் . ஆனால் முதலில் ,
சுரேஷ் சந்திரா தயங்கி இருக்கிறார் . ஆனால் இதை கேள்விப்பட்ட அஜித் தாராளமாக போய் பண்ணுங்க என்று கூறிவிட்டாராம் . அது மட்டுமல்லாமல் விஜய்யின் மகனுக்கு போன் செய்து வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறார்…