தற்போது நடிகர் விஜய் லியோ படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற படத்தில் பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படத்தில் அப்பா மகன் என்று இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நடிகர் விஜய் . இந்த படத்தில் இவருடன் இணைந்து பிரபுதேவா ,பிரசாந்த் ,மைக் மோகன் ,சினேகா ,லைலா ,மீனாட்சி , அஜ்மல் ,
போன்ற பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது . மேலும் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதற்கு கார்த்திக் சுப்புராஜ் , அட்லீ போன்ற பல இயக்குனர்கள்,
காத்துக் கொண்டிருக்கின்றனர் . ஆனால் விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் இன்னும் அந்தப் படத்திற்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை . ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் யார் என்ற தகவல் மட்டும் வெளியாகி உள்ளது . அவர் வேறு யாருமில்லை,
டி வி வி என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் உரிமையாளரான தனய்யா தான் . தெலுங்கில் வெளியான ஆர் ஆர் ஆர் என்ற பிரம்மாண்ட படத்தை தயாரித்து ஆஸ்கர் அளவிற்கு கொண்டு சென்றவர் தயாரிப்பாளர் தனய்யா . தற்போது இவர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டுள்ளதாக ,
கூறப்படுகிறது . மேலும் கோட் படத்திற்கு 200 கோடி விஜய்க்கு சம்பளம் பேசப்பட்டதாக கூறிய நிலையில் , இந்தப் படத்திற்கு 250 கோடியாவது விஜய் சம்பளம் வாங்குவார் என்று கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது…