இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதில் இளையராஜாவின் மகளான பவதாரணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார் . அந்த வகையில் இவர் தமிழில் வெளியான காதலுக்கு மரியாதை ,பாரதி, அழகி ,பிரண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு ,தாமிரபரணி, கோவா ,மங்காத்தா, மாநாடு போன்ற,
பல படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் பவதாரணி . மேலும் பாரதி படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் வென்று இருக்கிறார் பவதாரணி . குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும் ,
இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது என்று தான் சொல்ல வேண்டும் . இப்படி பாடகியாக இருந்து வந்த பவதாரணி அமிர்தம், இலக்கணம் ,வெள்ளச்சி ,மாயநதி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
இப்படி இருக்கும் நிலையில் 47 வயதான பவதாரணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென இறந்து விட்டார் . இவருடைய திடீர் மரணம் திரைப்பிரபலங்களையும் , ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…