May 5, 2024

அன்பு மகளை இழந்த இளையராஜா ..!! 47 வயதான பவதாரணி திடீர் மரணம் ..!! அதிர்ச்சியில் ரசிகர்கள் ..!!

இசைஞானி இளையராஜாவுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதில் இளையராஜாவின் மகளான பவதாரணி பின்னணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார் . அந்த வகையில் இவர் தமிழில் வெளியான காதலுக்கு மரியாதை ,பாரதி, அழகி ,பிரண்ட்ஸ், ஒருநாள் ஒரு கனவு ,தாமிரபரணி, கோவா ,மங்காத்தா, மாநாடு  போன்ற,

பல படங்களில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடல்களை பாடி இருக்கிறார் பவதாரணி . மேலும் பாரதி படத்தில் இடம் பெற்ற பாடலுக்காக சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதையும் வென்று இருக்கிறார் பவதாரணி . குறிப்பிட்ட பாடல்கள் மட்டுமே பாடி இருந்தாலும் ,

இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  இப்படி பாடகியாக  இருந்து வந்த பவதாரணி அமிர்தம், இலக்கணம் ,வெள்ளச்சி ,மாயநதி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி இருக்கும் நிலையில் 47 வயதான பவதாரணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென இறந்து விட்டார் . இவருடைய திடீர் மரணம் திரைப்பிரபலங்களையும் , ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *