கே எஸ் ரவிக்குமார் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட முன்னணி இயக்குனர் , நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த கே எஸ் ரவிக்குமார் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியான புரியாத புதிர் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தைத் தொடர்ந்து ,
சேரன் பாண்டியன் ,நாட்டாமை ,பெரிய குடும்பம், முத்து, அவ்வை சண்முகி, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார். அது மட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவை கலக்கி வந்த,
ரஜினி ,கமல் ,சரத்குமார் ,விஜயகாந்த், விஜய், அஜித் ,சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த கே எஸ் ரவிக்குமார் தற்போது முழு நேர நடிகராகவே மாறிவிட்டார்,
என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் தற்போது வில்லனாகவும் ,குணசித்திர நடிகராகவும் கலக்கிக்கொண்டு வருகிறார் . இதனிடையே கற்பகம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இயக்குனர் கே ஸ் ரவிக்குமார் . திருமணமான இவர்களுக்கு ,
மூன்று மகள்கள் உள்ளனர் . தற்போது மூன்று மகள்களுமே படித்து இன்று ஒரு நல்ல நிலை மையில் இருந்து வருகின்றனர். இப்படி இருக்கும் நிலையில் பலரும் பார்த்திடாத இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…