பொதுவாகவே ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு காதல் ஜோடி உருவாகுவார்கள். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 5 ல் காதல் ஜோடியாக மாறியவர்கள் தான் அமீர் மற்றும் பாவனி . பிக் பாஸ் வீட்டில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகி வந்தனர். பின்னர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர் . குறிப்பாக எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக ,
தான் செல்கின்றனர் . அதோடு தற்போது இருவரும் ஒரு படத்தில் ஹீரோ ஹீரோயினாக நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின் தங்களுடைய கல்யாணம் குறித்து அமீர் – பாவனி கூறியதாவது, எங்களுடைய திருமணம்,
இந்த வருடம் கண்டிப்பாக நடைபெறும் . அப்படி எங்கள் திருமணத்தில் விஜய் டிவி தொகுப்பாளினியான பிரியங்கா தான் தாலி எடுத்து கொடுக்க வேண்டும். இப்போது நாங்கள் ஒன்றாக இருப்பதற்கு முக்கிய காரணமே அவர்தான் என்று கூறியிருந்தார்கள் அமீர் – பாவனி …