May 7, 2024

என்னை தூக்கி விட்டதே கேப்டன் தான்..!! அவரை மட்டும் மறக்கவே மாட்டேன் ..!! பெருமையாக சொல்லிய பிரபல நடிகர் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு ஒரு தனி பெயர் உண்டு என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வந்ததால் அந்த கஷ்டம் என்ன என்பது விஜயகாந்துக்கு நன்றாகவே தெரியும் . இதனாலேயே விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர்ந்த பிறகு பல நடிகர்,  நடிகைகளை வளர்த்து விட்டார் . அப்படி என்னை தூக்கி விட்டதே ,

விஜயகாந்த் தான் என்று பெருமையாக பேசி இருந்தார் பிரபல நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சரத்குமார் தான் . கடந்த 1988 ஆம் ஆண்டு வெளியான கண் சிமிட்டும் நேரம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் நடிகர் சரத்குமார் . இதன் பிறகு இவர் நடித்த,

திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தது . அந்த நேரத்தில்தான் சரத்குமாருக்கு புலன் விசாரணை படத்தில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜயகாந்த் . இந்த படம் சரத்குமாருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது .

அதன் பிறகு சரத்குமாரை கேப்டன் விஜயகாந்த் கிட்டதட்ட 7 படங்களில் வில்லனாகவும் , மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க வைத்து அழகு பார்த்தாராம் . அதோடு தன்னிடம் யாராவது கதை சொன்னால் அந்த கதையில் விஜயகாந்த் நடிக்க வில்லை என்றால் ,

உடனே சரத்குமாரை நடிக்க சொல்லி கேட்பாராம் . இந்த காலத்தில் எந்த நடிகரும் அப்படியெல்லாம் கேட்க மாட்டார்கள் என்று கூறியிருந்தார் நடிகர் சரத்குமார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *