தமிழ் சினிமா உலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் கலக்கி கொண்டு இருப்பவர் நடிகை நயன்தாரா . சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார் . இருந்தாலும் இடையில் பல நடிகர்களுடன் ,
கிசுகிசுக்கப்பட்ட நயன்தாரா கடைசியில் இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா. ஆனால் திருமணமான பிறகு தான்,
இவருக்கு மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. இருந்தாலும் திருமணத்திற்கு முன்பே நயன்தாராவுக்கு இப்படி ஒரு கண்டிஷன் போட்டு இருந்தாராம் இயக்குனர் விக்னேஷ் சிவன் . அது என்னவென்றால் , தற்போது நடிகை நயன்தாரா இயக்குனர் அட்லீ இயக்கத்தில்,
ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் என்ற ஹிந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆனால் திருமணத்திற்கு முன்பே ஹிந்தி படத்தில் நடிக்க இருந்தாராம் நடிகை நயன்தாரா. ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹிந்தி படங்களில் நடித்தால் இன்னும் திருமணம் ,
தள்ளிப் போகும் . அதனால் திருமணம் செய்து கொண்ட பின்னர் எங்கு வேண்டுமானாலும் போ என்று கூறிவிட்டாராம். இதனால் தற்போது திருமணம் ஆகி விட்டதால் இனி தமிழ் மொழியை விட ஹிந்தி மொழிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார் என்று கூறப்படுகிறது…