எஸ் ஜே சூர்யா பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் உதவ இயக்குனராக பணியாற்றி வந்த எஸ் ஜே சூர்யா வாலி என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து குஷி ,நியூ , இசை போன்ற பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் . பின்னர் இயக்குவதை நிறுத்திவிட்டு முழுநேர நடிகராகவே மாறிவிட்டார் நடிகர் எஸ் ஜே சூர்யா.
அந்த வகையில் சமீப காலமாக வில்லனாக நடிப்பதற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா. அப்படி சமீபத்தில் வெளியான மாநாடு ,டான் , மார்க் ஆண்டனி போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகர் எஸ் ஜே சூர்யா .
மேலும் 55 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார் நடிகர் எஸ் ஜே சூர்யா . இப்படி இருக்கும் நிலையில் எஸ். ஜே. சூர்யாவுக்கு அந்த நோய் இருக்கிறது என்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன் . அந்த வகையில்,
எஸ் ஜே சூர்யாவுக்கு ஓ சி டி என்ற மனநோய் இருக்கிறதாம் . அதாவது ஒரே எண்ணத்தை குறிப்பது , திரும்பத் திரும்ப அந்த எண்ணமே வரும். அப்படி ஒரு விஷயத்தை செய்யும்போது நம்பிக்கை இல்லாமல் திரும்பத் திரும்ப அதையே பார்த்துக் கொண்டிருப்பது தான் இந்த ஓசிடி நோயாம்.
இந்த பிரச்சனை எஸ்.ஜே சூர்யாவுக்கு உள்ளது என்று நடிகர் விஷாலே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஒருவேளை இதனால் தான் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லையா என்று கூறி வருகின்றனர்…