April 22, 2024

என்னை மன்னிச்சிடுங்க..!! வேணுமுன்னு இப்படி பண்ணல ..!! திடீரென மன்னிப்பு கேட்ட நயன்தாரா ..!!

இந்த வருடம் தொடங்கியதுமே நயன்தாராவுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.  அதற்குக் காரணம் அவர் கடைசியாக நடித்த அன்னபூரணி திரைப்படம் தான் . அந்த வகையில் கடந்த வருடம் இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் அன்னபூரணி.  இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ,

சத்யராஜ் ,ஜெய் ,கே எஸ் ரவிக்குமார், கார்த்திக் குமார் ,ரேணுகா, சச்சு ,ரெடின், பூர்ணிமா ரவி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் வெறும் 5.70 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது . அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் ராமர் அசைவம்,

சாப்பிட்டதாக இடம் பெற்ற வசனம் பெரும் சர்ச்சையை கிளப்பியது . இதனால் அன்னபூரணி திரைப்படத்தை ஓடிடி தளத்திலிருந்தே  நீக்கம் செய்தார்கள். இதனால் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே போனதால் வேறு வழி இல்லாமல் மன்னிப்பு அறிக்கை ஒன்றை,

வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா.  அதில் ஜெய் ஸ்ரீ ராம் என்று குறிப்பிட்டு , நல்ல மெசேஜ் உடன் தான் நாங்கள் படத்தை உருவாக்கினோம் . யாரையும் புண்படுத்துவதற்காக இந்த படத்தை உருவாக்கவில்லை . நானும் கடவுள் நம்பிக்கை கொண்டவள் தான்,  நாடு முழுவதும் ,

பல கோவில்களுக்கு சென்று இருக்கிறேன்.  இதை நாங்கள் வேண்டுமென்றே செய்யவில்லை.  அப்படி மனம் புண்பட்டு இருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தார் நடிகை நயன்தாரா …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *