தற்போது தமிழ் சினிமாவை கலக்கிவரும் இளம் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் . நடிகை மேனகாவின் இளைய மகளான கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது ரஜினி முருகன் படத்தின் மூலம்தான் .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் உடன் தொடரி ,விஜய் உடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், ரஜினியுடன் அண்ணாத்த போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள,
மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . ஆனால் அண்மை காலமாக இவர் நடிக்கும் திரைப்படங்கள் எதுவும் பெரிய அளவில் வரவேற்பை பெறாமல் இருக்கிறது . அப்படி இருந்தும் கூட தற்போது நான்கு திரைப்படங்களுக்கு மேல் கைவசம்,
வைத்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ் . இந்நிலையில் 31 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் சமூக வலைத்தள பக்கத்தில் சேலையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் . இதை பார்த்த ரசிகர்கள் பொண்ணு ரெடி மாப்பிள்ளை ரெடியா என்று கூறி வருகின்றனர்…