April 30, 2024

விஜயகாந்துக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டதே இவர் தானா ..?? அரசியலால் பாதி நொந்துபோன கேப்டன் ..!!

அரசியல் என்றாலே பலரும் அதை சாக்கடை என்றுதான் சொல்லுவார்கள் . ஏனென்றால் நல்ல மனிதர்களையும் அரசியல் எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிடும் . அதற்கு பெரிய உதாரணம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான்.  தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக கலக்கி கொண்டு வந்த விஜயகாந்த் திடீரென தேமுதிக என்ற கட்சியை தொடங்கினார்.  அப்படி அவர் சந்தித்த ,

முதல் தேர்தலிலேயே வெற்றியும் பெற்றார் .இதன் பிறகு தான் இவருக்கு கெட்ட நேரம் ஆரம்பித்தது.  அதாவது அவருடைய உடல்நிலை மாற்றம் . இதனால் இவரால் அரசியல் , சினிமா இரண்டிலும் பெரிய அளவில் ஈடுபட முடியவில்லை . மேலும் விஜயகாந்த் சினிமாவில் இருந்திருந்தால் கூட,

இந்நேரம் உயிருடன் இருந்திருப்பார்.  அவர் அரசியலுக்கு சென்றதால் தான் இப்படி ஆனார் என்று பலரும் கூறி வருகின்றனர் . அப்படி விஜயகாந்துக்கு அரசியல் ஆசையை தூண்டி விட்டதே இவர் தானாம் .  அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ஆர்கே செல்வமணி தான் . அந்த வகையில் ,

விஜயகாந்த் நடிப்பில் வெளியான புலன் விசாரணை,  கேப்டன் பிரபாகரன் போன்ற படங்களை இயக்கியிருந்தது ஆர் கே செல்வமணி தான்.  மேலும் இவர் அப்பவே பல பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பாராம் . அதோடு அப்போது விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்திருக்கிறார்.

அந்த நேரத்தில் நதி நீர் பிரச்சனை, ஈழத் தமிழர் பிரச்சினை, காவிரி முல்லை பெரியாறு பிரச்சனை போன்ற பிரச்சனைகளை கேப்டனிடம் சொல்லி எல்லா நடிகர்களையும் போராட வைத்திருந்தார் . இதன் பிறகு தான் விஜயகாந்துக்கு அரசியல் மீது ஒரு நாட்டம் வந்திருக்கிறதாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *