பொதுவாகவே தமிழ் சினிமா உலகில் ஒரு போட்டி நிலவி வருகிறது. அது என்னவென்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் .? அடுத்த உலக நாயகன் யார் .? என்று, இப்படி இருக்கும் நிலையில் அடுத்த எம்ஜிஆர் இந்த நடிகர் தான் என்று அடித்து சொல்லி இருக்கிறார் தயாரிப்பாளர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை தயாரிப்பாளர் கே ராஜன் தான். எப்போதும் சர்ச்சையாக பேசும் கே ராஜன் எம்ஜிஆர் பற்றி பேசியிருந்தார்.
அதில் இப்போது இருக்கும் சூழலில் அடுத்த எம்ஜிஆர் வேண்டுமென்றால் அது அஜித்தால் தான் முடியும் என்று கூறியிருக்கிறார் . காரணம் எம்ஜிஆருக்கு உள்ள அனைத்து தகுதிகளும் அஜித்துக்கும் உண்டு. எம்ஜிஆரை போல இவரும் எந்த ஒரு சினிமா பின்புல மும் இல்லாமல்,
சினிமாவிற்கு வந்தவர் . அப்படி அவரைப் போல ஒழுக்கத்தில் அஜித்தை அடித்துக் கொள்ளவும் ஆளே கிடையாது. அது மட்டுமல்லாமல் எம்ஜிஆரை போல உதவும் மனசு அஜித்துக்கும் இருக்கிறது . அதோடு அஜித் எப்போதே ரசிகர்களின் நலம் கருதி தன்னுடைய ரசிகர்,
மன்றத்தையே கலைத்து விட்டார் . இப்படி எம்ஜிஆருக்கு உள்ள எல்லா தகுதிகளும் தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களிலேயே அஜித்துக்கு மட்டும்தான் உள்ளது என்று அடித்து சொல்லியுள்ளார் தயாரிப்பாளர் கே ராஜன் . ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள் ,
மீடியா பக்கமே தலை காட்டாத அஜித் தான் அடுத்த எம்ஜிஆரா என்று தயாரிப்பாளார் கே ராஜனை பார்த்து கேள்வியெழுப்பி வருகின்றனர் . தற்போது தயாரிப்பாளர் கே ராஜன் கூறிய விஷயம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…