April 22, 2024

கலராக இருந்த ரச்சிதாவா இது ..?? படத்திற்காக எப்படி மாறிவிட்டார் பாருங்க ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ரச்சிதா .  இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தான்.  இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ,

பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த பல சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம், நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை ,புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்  நடிகை ரச்சிதா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,

கடந்த 2013 ம் ஆண்டு சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா . திருமணமாகி இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே ,

பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை  ரச்சிதா தற்போது ஃபயர் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.  இந்த படத்திற்காக தன்னுடைய நிறத்தையே மாற்றி இருக்கிறார் நடிகை ரச்சிதா . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .

இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவா இது என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *