ரச்சிதா மகாலட்சுமி ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். கடந்த 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகை ரச்சிதா . இருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி 2 சீரியல் மூலம் தான். இந்த சீரியல் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ,
பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் இந்த பல சீரியலை தொடர்ந்து நாச்சியார்புறம், நாம் இருவர் நமக்கு இருவர் 2 ,இது சொல்ல மறந்த கதை ,புது புது அர்த்தங்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் நடிகை ரச்சிதா . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே ,
கடந்த 2013 ம் ஆண்டு சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரச்சிதா . திருமணமாகி இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே ,
பல திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை ரச்சிதா தற்போது ஃபயர் என்ற படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். இந்த படத்திற்காக தன்னுடைய நிறத்தையே மாற்றி இருக்கிறார் நடிகை ரச்சிதா . அந்த புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது .
இதை பார்த்த ரசிகர்கள் ரச்சிதாவா இது என்று ஆச்சிரியத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க …