April 30, 2024

9 வருடம் தவம் இருந்து பெற்ற மகனின் ..!! முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ” சரவணன் மீனாட்சி ” ஜோடி ..!!

செந்தில்குமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் சீரியல் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் ரேடியோ மிர்ச்சியில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றி வந்த செந்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான தவமாய் தவமிருந்து என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கண் பேசும் வார்த்தைகள், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், வெண்ணிலா வீடு, சூரரைப் போற்று ,

போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தான் . இந்த சீரியல் இவரை பட்டித்தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . அது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் நடித்திருந்த,

நடிகை ஸ்ரீஜாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் செந்தில் . மேலும் திருமணமாகி கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லாமல் இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

இந்நிலையில் செந்தில்-  ஸ்ரீஜாவின் மகனுக்கு சமீபத்தில் முதல் பிறந்தநாள் கோலாகலமாக நடைபெற்று இருக்கிறது . அந்தப் புகைப்படங்களை தற்போது மிர்ச்சி செந்தில் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதோ வந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *